25 February

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” – 2025.01.12ம் திகதி
“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையுடன் இணைந்து நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் (நெஸ்டோ) சுகாதாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்தான முகாம் 2025.01.12ம் திகதி கமு/கமு/அல் – அக்ஸா மத்திய மஹா வித்தியாலயத்தின் ஆராதணை மண்டபத்தில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் நடை பெற்றது.
இம் மாபெரும் இரத்ததான முகாமில் நற்பிட்டிமுனை சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒன்றியத்தின் (நெஸ்டோ) உயர் பீட உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.